தம்மை சந்திப்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் ஊடகம் ஒன்று இதனை இன்று தெரிவித்தது. ஈழத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப் பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜெயலலிதா ஜெயராம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment