இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்த பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்கினை வகிக்கிறது.
இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தம்மிடம் உள்ளது என்பதை நரேந்திர மோடி உணர்ந்துக் கொண்டுள்ளார். அதனை தாம் நேரடியாக கையாளும் வகையில், விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது, இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக பார்த்தசாரதியை விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment