யாழ். வல்லைப் பகுதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலிருந்து கைக்குண்டொன்று திங்கட்கிழமை (05) மாலை மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர். இது தொடர்பில் அவ்வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, இராணுவத்தினருடன் அங்கு சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி பகுதி இராணுவ முகாமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment