ஆயுத போராட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்த இந்தியா, தற்போது ஏன் மௌனம் சாதிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? கேள்வி எழுப்பியுள்ளது. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
நியாயமான அரசியல் தீர்வை பெற்றுத்தருவதற்கு இந்தியா தொடர்ந்தும் பின்நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, அரசாங்க கட்சியில் இருந்தும் கூட காணி அபகரிப்பை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கருத்து வெளியிட்டார்.
Post a Comment