Home » » வைத்தியசாலை மாடியிலிருந்து தவறி வீழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு

வைத்தியசாலை மாடியிலிருந்து தவறி வீழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு

Written By Namnilam on Monday, May 26, 2014 | 10:23 PM

மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு கன்னங்குடாவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை (வயது 80) என்பவரே மரணமானவராவார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆண்களுக்கான கண் நோயாளர் விடுதி முதலாவது மாடியில் அமைந்துள்ளது. விடுதியின் யன்னல்கள் 'க்றில்' இல்லாது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன. குறித்த முதியவர் அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் கண்தெரியாத நிலையில் கதவால் வெளியேறுவதற்குப் பதிலாக யன்னலால் வெளியேறியதாலேயே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger