Home » » சங்கரி இருக்கும்வரை த.வி.கூட்டணி உருப்படாது, பதவி விலகுகிறார் முகுந்தன்

சங்கரி இருக்கும்வரை த.வி.கூட்டணி உருப்படாது, பதவி விலகுகிறார் முகுந்தன்

Written By Namnilam on Sunday, May 4, 2014 | 3:33 PM

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கட்சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் என தெரியவருகிறது.


ஆனந்தசங்கரி இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் அவர் கட்சியை விட்டுப் போகும்வரை அல்லது அவரது இறுதிக் காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்து கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறியத் தருகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரிக்கு அக்கட்சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் நீண்ட கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.


உங்களுடன் வாக்குவாதப்பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத் தருகிறேன்.


மேலும் சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்துப் பாரிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு உங்களுக்கு விளக்கமான கடிதமொன்றினை அனுப்பி வைக்கின்றேன்.


உங்களுடைய முட்டாள்தனமான அறிக்கைகள், நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிறீர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிறீர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது.


நீங்கள் கூட்டணியில் இருக்கும் வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள். மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை. இதில் நீங்களும் அடங்குவீர்கள்.


நாம் ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன் என்று தங்க முகுந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


முகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக அறிக்கை விடுகிறார்


ஆனந்தசங்கரி கிண்டல்


தங்க முகுந்தன் எமது கட்சியில் அங்கத்தவராக இருந்தால்தானே கட்சியிலிருந்து விலக முடியும். அவர் எமது கட்சி அங்கத்தவரே இல்லை. அப்படியிருக்க அவரது அறிக்கையை ஒரு கதை என்று என்னிடம் சிலர் விசாரிக்கின்றனர்.


குடும்பத் தகராறு காரணமாக சுவிஸிலிருந்து வந்த அவருக்கு தங்க இடமும், சம்பளமும் கொடுத்து பாவம் எனக் கருதி எம்முடன் வைத்திருந்தால், அவர் எமக்கே துரோகம் செய்ய முனைகிறார்.


அவரது முட்டாள் தனத்தை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார். இப்போது அது தெரியவந்ததும் எம்மீது வீண் பழி சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார்.


இதுவரை காலமும் என்னுடன் ஒரு எட்டப்பனை வைத்திருந்தமையையிட்டு நான் வேதனை அடைகின்றேன் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


அவரை நான் விலக்க அவர் கட்சி அங்கத்தவர் இல்லை என்பதால் அவர் விரைவாக எமது அலுவலகத்திலிருந்து தானாக வெளியேறுவது அவருக்குத்தான் நல்லது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger