வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் மசாஜ் என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் எலிசபெத் ராணி, நிர்வாகி சக்திவேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை மீட்டனர்.
இதே போல் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் விபசார தொழில் செய்து வந்த பத்மா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆந்திராவைச் சேர்ந்த 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். மாங்காட்டில் விபசாரம் நடத்தி வந்த கவிதா என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த ஒரு இளம்பெண்ணும் மீட்கப்பட்டார்.
போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இண்டர்நெட் மற்றும் செய்தி தாளில் மசாஜ் சென்டரில் வேலை செய்ய படிப்பு, முன் அனுபவம் தேவையில்லை, மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் என்ற ஆசை வார்த்தைகள் மூலம் விளம்பரப்படுத்தி, நல்ல வேலை என்று நம்பி வரும் இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தி, பிறகு கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரிய வந்தது.
Post a Comment