Home » » மகளுக்காக கோர்ட்டுக்கு செல்லும் லியாண்டர் பெயஸ்

மகளுக்காக கோர்ட்டுக்கு செல்லும் லியாண்டர் பெயஸ்

Written By Namnilam on Monday, May 5, 2014 | 8:29 PM

இந்திய டென்னிஸ் சாதனையாளர் லியாண்டர் பெயசும், பிரபல மாடல் அழகி ரியா பிள்ளையும் காதலித்து வாழ்க்கையில் இணைந்தவர்கள். இவர்களுக்கு அயனா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீப காலமாக பெயசுக்கும், ரியா பிள்ளைக்கும் இடையே சுமுக உறவு இல்லை.


கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தையை யார் பராமரிப்பது என்பதிலும் பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த நிலையில் லியாண்டர் பெயஸ் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.


குழந்தையின் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் கருதி குழந்தை அயனாவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும், கோர்ட்டின் உத்தரவு இல்லாமல் ரியா பிள்ளை மும்பைக்கு வெளியே குழந்தையை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று மனுவில் லியாண்டர் பெயஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


முன்னதாக மும்பை போலீசிலும் லியாண்டர் பெயஸ் புகார் கொடுத்துள்ளார். அதில் 8 வயதான மகள் அயனாவை, ரியா பிள்ளை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று விடலாம் என்று பயப்படுவதாக கூறியிருக்கிறார். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. ரியா பிள்ளை, நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger