Home » » ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்வு

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்வு

Written By Namnilam on Tuesday, May 6, 2014 | 6:50 PM

ஐ.பி.எல் கிரிக்கெட் முறைகேடு குற்றச்சாட்டில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு ஐபிஎல் கிரிக்கெட் முறைகேடு புகாரில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் லலித் மோடி போட்டியிட்டார்.


லலித் மோடி போட்டியிடுவதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லலித் மோடி போட்டியிட தடை விதிக்க மறுத்ததோடு, தேர்தல் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது.


இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வு முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லலித் மோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட்


இதனிடையே, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ள பிசிசிஐ, ராஜஸ்தான் கிரிக்கெட் நடவடிக்கையை கவனித்துக் கொள்வதற்காக தற்காலிக குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் இந்த அதிரடி முடிவு காரணமாக லலித் மோடி தலைவராக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger