என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
வெல்லம், கருப்பட்டி - 2 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1 மூடி,
தண்ணீர் - 4 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியைக் களைந்து வைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை தண்ணீரில் போட்டு சூடாக்கி, நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி, கொதிவந்ததும் அரிசியைப் போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய் சேர்த்து இறக்கவும். இது 2 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
உதடு: இன்றைய இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான். இந்த உடல் சூட்டை போக்க ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வையுங்கள். காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடியுங்கள். அதே போல் இரவில் படுக்கப் போகும் போது வெண்ணெயை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்துவிடும்.
Post a Comment