குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம் என்று அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வீட்டில் குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதில், 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, இந்த சிறுமிகளின் பெற்றோரின் அனுமதியுடன் தான் அவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரனை நடத்த குழந்தைகள் நல அமைப்பாளர்கள் மீண்டும் இன்று கங்கை அமரன் வீட்டிற்கு வருவார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Post a Comment