Home » , » ரஞ்சிதா- நித்யானந்தாவுடன் இணைந்த சித்தார்த்- திருப்பதியில் தரிசனம்

ரஞ்சிதா- நித்யானந்தாவுடன் இணைந்த சித்தார்த்- திருப்பதியில் தரிசனம்

Written By Namnilam on Thursday, June 19, 2014 | 8:49 AM

நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பிறகு நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே, தனக்கும் நித்யானந்தா சாமியாருக்கும் இடையே குரு–பக்தை உறவு மட்டுமே இருப்பதாக நடிகை ரஞ்சிதா கூறினார். கடந்த டிசம்பர் மாதம் நித்யானந்தாவின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சிதை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசியானார்.

இந்நிலையில் நேற்று நித்யானந்தா, ரஞ்சிதா உட்பட சீடர்கள் பலர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நித்யானந்தா சாமியார் தன்னுடைய கழுத்தில் பெரிய அளவில் தங்க ஆபரண மாலை ஒன்றை அணிந்திருந்தார். ரஞ்சிதா தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார்.அதிகம் வெளியில் வராமல் இருந்த ரஞ்சிதா மீண்டும் தற்போது நித்யானந்தாவுடன் வெளியில் சுற்றி வருகிறாராம்.

நடிகர் சித்தார்த்தும் தரிசனம் செய்வதற்காக திருப்பதி வந்திருந்தார். இவர் தனது தலைமுடியை இறக்கி வேண்டுதலை நிறைவேற்றினார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger