சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் டாப்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமரசம் ஆகி இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இதில் இன்னொரு நாயகியும் இருப்பதுபோல் கதையை மேலும் மெருகேற்றி உள்ளாராம் இப்படத்தின் டைரக்டர் பாண்டிராஜ்.
அதில் நடிக்க நாயகி தேடினார். தற்போது டாப்சியை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து மும்பையில் வேறு படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த டாப்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை உறுதிப்படுத்தினார்.
இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நடிக்க கேட்டு என்னை அணுகியுள்ளனர். இதற்கான பேச்சு நடக்கிறது. ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது ரசிகர்கள் என்னை இரண்டாவது கதாநாயகியாக பார்த்தனர். ஆனாலும் எனது கேரக்டரில் நான் தனித்து நின்றேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாராதான் நாயகியாக நடிக்கிறார். நான் இரண்டாவது நாயகியாக வருகிறேன் என்றார்.
Post a Comment