Home » , , , , , , » வைத்தியர் இன்மையினால் 4 மாத குழந்தை உயிரிழப்பு - வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு

வைத்தியர் இன்மையினால் 4 மாத குழந்தை உயிரிழப்பு - வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு

Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 9:00 PM

நான்கு மாத குழந்தையொன்று  ஊறணி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 02 மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியர் இன்மையினாலே இம்மரணம் சம்பவித்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


police


யாழ்.வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த ஜெயராஜா கலா என்பவரே இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.'எனது நான்கு மாத குழந்தையான ஜெயராஜா தனுஷிகாவை இரத்த உறைவு காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (25) கொண்டு சென்றேன்.  இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே வைத்தியர் வந்தார். வைத்தியர் வந்தபோது குழந்தை இறந்துவிட்டது' என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இக்குழந்தை இத் உறைவு காரணமாக கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்த நிலையிலே மீண்டும் திடீரென இரத்த உறைவு ஏற்பட்டமையினால் ஊறணி வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger