யாழ்.சுழிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளும் - துவிச்சக்கர வண்டியும்; நேருக்கு நேர் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சுழிபுரத்தினைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கணேஸ் (72) என்ற வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment