வடமாகாண சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளுடைய வாகனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் இடம்பெற வேண்டும் என மாகாண சபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞனம் மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் தங்கள் வாகனங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழியில் பொருத்தமை தொடர்பாக மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மாகாண சபையிலும் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ, பெயர் பலகைகள் மாற்றப்பட்டதாகவோ தெரியவில்லை.இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் தங்கள் வாகனங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழியில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை தலைவர் தன் எழுத்துமூல கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும் இந்தக் கடிதத்தின் பிரதிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்ட ங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment