காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சங்குவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 26 மற்றும் 23 வயதான இரு இளைஞர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடை யுவதி ஒருவரின் சகோதரனினால் அழைத்து வரப்பட்ட ஒரு குழுவினரே இவர்களைத் தாக்கியதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment