வவுனியா மாவட்டத்தின் ஓயார்சின்னக்குளம், பாலையடி பகுதியில் நேற்றிரவு வானொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால், படுகாயமடைந்த நிலையில் ஆணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து புதுக்குளம் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் வண்டியும் தாண்டிக்குளம் நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்றும் நேருக்குநேர் மோதியே குறித்த விபத்துச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த நபரொருவர் கை, மற்றும் கால்களில் முறிவுக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment