வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும், யாழ். மாவட்ட மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து நெடுங்கேணியில் நேற்று (23.02.2014) காலையிலிருந்து நண்பகல் வரை இலவச மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்.
தண்டுவான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் நெடுங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட கரடிப்புலவு, தண்டுவான், பழம்பாசி, இத்திமடு, தட்டையன்மலை, ஒதியமலை, நெடுங்கேணி நகரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் தேக ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் கருதி, வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், ஒவ்வொரு வாரமும் இலவச மருத்துவ முகாம்களை பிரதேச ரீதியாக நடத்தி வருகின்றார். இது அவரது நான்காவது இலவச மருத்துவ முகாம் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment