யாழ்.கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் கோவிலுக்கு முன்னாலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்விடத்தில் துர்;நாற்றம் வீசியதையடுத்து குளத்தினைச் சென்று பார்த்த போதே மேற்படி சடலம் மிதந்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு இன்னமும் நீதவான் வருகை தரவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment