கிளிநொச்சியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்பின் கலந்துரையாடல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
பூநகரி பலநோக்கூட்டுறவு சங்கத்தலைவர் ம.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக, சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் என்பன உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், சம்பவங்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment