வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென் ஜான்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 108வது போட்டியே இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற 107வது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்திருக்கின்ற நிலையில், இந்தப் போட்டி தொடர்பில் இரண்டு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடுமென அணிகளின் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய இன்று காலை 9 மணியளவில், இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து 10 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகும். தினமும் காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெறுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment