ஒமந்தை பகுதியின் புகையிர பாதையில் தூங்கிக்கொண்டிருந்த மாடுகள் மீது கொழும்பில் இருந்து வந்த யாழ்தேவி புகையிரதம் ஏறி சென்றுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகளும் இறந்த நிலையில் காணப்பட்டது.
இது தவிர முன்னைய காலங்களில் இவ்வாறாக கால்நடைகள் ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேரூந்துகளில் சிக்கி இறக்கும் நிலை காணப்பட்டதாகவும்.தற்போது யாழ்தேவியிலும் மாட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
இதுவேளை மழைகாலங்களில் இவ்வாறாக கால்நடைகள் குளிர் காரணமாக தமது உடல் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்வதற்காக காப்பெற் வீதியின் கரையோரங்களில் நித்திரை கொள்வது வழமை.இதன் காரணமாக மழை கால விபத்துக்களில் அதிகளவான கால்நடைகள் சிக்கிக்கொள்கின்றன.
எனினும் வீதியின் விபத்து சாரதிகளில் வேக கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் யாழ்தேயில் நிலை அவ்வாறு இல்லை.எனவே இவ்வாறான கால்நடைகளிற்கு எதிர்காலத்தில் யார் பொறுப்பு?உரியவர்கள் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தூவார்களா?
Post a Comment