தனது பிரேரணை தோல்வி அடைந்துவிட கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பொது செயலாளருமான மாவை சேனாதிராஜா இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்ட பிரேரணையை ஆதரிக்க மனித உரிமைகள் மாநாட்டின் பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை. இந்த நிலையில் யுத்தக் குற்ற விசாரணைக்கனை பிரேரணையை சமர்ப்பித்து அதில் தோல்வி கண்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இருக்கின்றமையை அந்த நாட்டு பிரதிநிதிகளை சந்தித்த போது புரிந்துக் கொள்ள கூடியதாக இருந்ததாக மாவை சேனாதி ராஜா தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாகவே அமெரிக்கா இந்த முறை பிரேரணையிலும் சர்வதேவ விசாரணையை வலியுறுத்தவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
Post a Comment