Home » » இளம் இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் பொப்பிசை சக்கரவர்த்தி நித்தி கனகரட்னம்

இளம் இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் பொப்பிசை சக்கரவர்த்தி நித்தி கனகரட்னம்

Written By Namnilam on Wednesday, March 12, 2014 | 7:57 AM

முப்பது வருடங்களுக்கு பின் இளம் இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் பொப்பிசை சக்கரவர்த்தி நித்தி கனகரட்னம் . மூத்த கலைஞர்களும், இளங்கலைஞர்களும் இணைத்து பணியாற்றும் பொற்காலம் இப்போது ஈழ திரைத்துறையில் மலர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தின் பொப்பிசை சக்கரவர்த்தி நித்தி கனகரட்னமும்,  இளம் இசையமைப்பாளர் மதீசன் தனபாலசிங்கமும் இணைந்து பணியாற்றவிருக்கிறார்கள்.


1983 அண்டுக்கு பின்னர் பொப்பிசை துறையிலிருந்து ஒதுங்கியிருந்த நித்தி கனகரட்னம் அவர்கள் முப்பது வருடங்களுக்கு பின்னர் பொப்பிசை துறைக்கு மீண்டும் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு பாடல்கள் உள்ளடங்கலாக விரைவில் வெளிவரவிருக்கும் இவ் இசைத்தட்டின் விளம்பரப் பாடல் வருகிற மார்ச் 14 அன்று, யாழ் இந்துக்கல்லூரி ‘இளசுகள்’ குழுமத்தின் 3 வது ஆண்டு நிறைவு நாளையொட்டி வெளிவருகிறது. அன்றைய தினம், இந்த இறுவட்டின் மேலதிக தகவல்கள் பற்றி அறிவிக்க இருக்கிறார்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger