அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்காக சட்ட ஆலோசனைகளை பெறவும்ää சட்டத்தரணிகளை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சோசலிஸ இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்ள இடமளிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பு வீசா நிராகரிக்கப்பட்ட அகதிகள் மீண்டும் அதற்கு மேன்முறையீடு செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment