Home » » புலிகளின் பிரசுர அச்சடிப்பு, கணணி ஆசிரியர் யாழில் கைது

புலிகளின் பிரசுர அச்சடிப்பு, கணணி ஆசிரியர் யாழில் கைது

Written By Namnilam on Tuesday, April 22, 2014 | 3:06 PM

விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பிரசுரங்களை அச்சிட்டதாக குற்றம் சுமத்தி கணணி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆசிரியரிடம் இருந்து மடிக்கணணி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மானிப்பாய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


இதேவேளை கிளிநொச்சியில் போலி றப்பர் முத்திரைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger