இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான 'டாடா' குழுமத்தைச் சேர்ந்த 'டாடா' வீடமைப்பு நிறுவனம், இலங்கையில் நகர வீடமைப்புத் துறையில் 400 மில்லியன் டொலரை (சுமார் 5 ஆயிரத்தி 200 கோடி ரூபாவை) முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் கொழும்பில் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் அடுத்த 6 தொடக்கம் 8 ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். இதற்கென கொழும்பு நகரத்தில் எட்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். இதில் மூன்று ஏக்கர் நிலம் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், பல இடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை அகற்றவுள்ளது. அவர்களில் ஒரு பகுதியினருக்கும் புதிய வீடமைப்புத் திட்டங்களில் குடியிருக்கும் வசதிகள் அளிக்கப்படவுள்ளன எனக் கூறப்படுகிறது.
Post a Comment