Home » » கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் சாவு

கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் சாவு

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 11:44 AM

கடும் காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த பேராதரன் கிருஷ்ணகுமாரி (வயது 27) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அவர் உயிரிழந்ததார் எனத் தெரிவிக்கப்பட்டது. மரண விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger