பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருஸல்ஸில் நேற்று மர்ம நபர் ஒருவர் அல்லது பலர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் இரு ஆண்கள், ஒரு பெண் என மூவர் கொல்லப்பட்டுள்ளனர். புரூஸல்ஸில் உள்ள யூதர்களின் அருங்காட்சியத்திற்கு கார் ஒன்றில் வந்த தாக்குதல்தாரி, அருங்காட்சியம் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாக ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றுமொருவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் நிச்சயம் யூத எதிர்ப்புத் தாக்குதலாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என பெல்ஜியம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment