தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தளவுற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப் போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment