உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கடும் மழை பெய்து கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிராக்டருடன் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் உயிரிழந்ததார். மற்றையவர் காயமடைந்தார். ராஜ்கரன் (வயது 19) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்
Post a Comment