இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 51 பேரையும் இலங்கை அரசு விடுவித்துள்ளதாக அறியமுடிகிறது. சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இன்று உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் மூன்று கட்டங்களாகப் பிடிக்கப்பட்டு, இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 51 இந்திய மீனவர்களையும் விடுவித்துள்ளதாக இலங்கைத்தரப்பு அறிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவிலும் இலங்கை மீனவர்கள் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment