உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தைக்கு 'ஆரத்யா' என பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை.
இந்நிலையில் மணிரத்னம் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக கூறப்படுகிறது.மும்பையில் லோக்சபா தேர்தலில் வாக்களிப்பதற்காக ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் வந்த போது ஐஸ்வர்யாராய் வயிறு பெரியதாக இருந்ததுடன் எடையும் கூடியிருந்தது. இதன் மூலம் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment