ஒரு பழைய பங்களா, அந்த பங்களாவுக்கு போகும் ஒரு குடும்பம். அங்கே தங்கியிருக்கும் பேய் ஒன்று அவர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர். இப்படி ஆயிரம் படங்களாவது எல்லா லாங்குவேஜ்லேயும் வந்திருக்கு. நானும் அப்படியொரு கதை களத்தைதான் எடுத்திருக்கேன் என்றார் சுந்தர்சி.
இவ்வளவு வெளிப்படையாக அவர் கூறிவிட்டாலும், அவரது இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை’ படத்தில் ஒரு விசேஷம். இதில் ஹன்சிகா மோத்வானிக்கு தெய்வீக சக்தியுள்ள கேரக்டர் வழங்கப்பட்டிருக்கிறதாம். அவர் சொல்வது எல்லாமே நடந்துவிடுவதால், அவரை தெய்வ பெண்ணாகவே பார்ப்பார்களாம் படத்தில்.
இவ்வளவு நல்ல கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும், படம் எப்ப சார் முடியும்? நாம எப்ப இந்த பங்களாவை விட்டு கிளம்புவோம் என்று கேட்டு நச்சரித்துவிட்டாராம் அவர். ஷூட்டிங் ஸ்பாட்ல பேய் நடமாடுதோ என்கிற சந்தேகம்தான் இந்த பதற்றத்துக்கு காரணம். எப்படியோ சேதாரமில்லாமல் வெண்ணையை வெளியே அனுப்பி வைத்திருக்கிறார் சுந்தர்சி.
Post a Comment