சிலம்பரசன் என்ற தனது பெயரை எம்.ஜி.ஆர் போல எஸ்.டி.ஆர் என்று சுருக்கி வைத்துக் கொண்டவர் சிம்பு. ஸ்தீரி லோலன் என்ற பிம்பம் அவர் மீது கவிந்திருந்தாலும் சமீபகாலமாக அவர் மனமாற்றாம் அடைந்து வருகிறார்.
இமயமலைக்கும் ரிஷிகேஸுக்கும் பயணம் செய்து தனது ஆன்மீக ஈடுபாட்டைக் காட்டி வருகிறார். மேலும் ஆன்மிக ஈடுபாடு தன்னை மாற்றிக்கொள்ள பெரிதும் உதவும் என தீவிரமாக நம்புகிறார்.
அவர் நம்பியதைப்போலவே தன்னுடைய அகந்தை அழிந்துவிட்டதாக நினைக்கும் சிம்பு தன்னுடைய பட்டமான 'young super star' என்னும் பட்டதை துறக்க முடிவு செய்துவிட்டதுதான். "தேவையற்ற சுமைகளை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளேன். என்னுடைய திரைவாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன்.
என்னுடைய இமேஜ், அது என்னுடைய ரசிகர்கள் இடையே ஏற்படத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் 'முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள்' வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன்.
திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி, எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்கான முதல் வழியாகும்.
என்னுடன் என்றென்றும் இருக்கும், இருக்க போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்” என்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருக்கிறார் சிம்பு.
Post a Comment